வியாழன், 5 ஜூன், 2014

புத்தகமும் தொலைக்காட்சியும்...

நெடு நாட்களுக்குப் பின்
மத்திய அறையில்
அமர்ந்து
புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்..
வரும் சிரிப்பை
இறந்து போன
தொலைக்காட்சியின் மீது
சிதறவிட்டு விட்டு.....

எடுத்து வைத்து
படித்த புத்தகத்தோடு நானும்
கைபேசியுடன் அவனும்...

என்னத்த இருக்கு
இந்த புத்தகத்துலயும்
கைபேசியிலுமென
திட்டத் தொடங்கினாள்
என் அம்மா....

கருத்துகள் இல்லை: