வியாழன், 20 மார்ச், 2014

அன்னையின் மடியில் !!


கண் விழித் திருக்கவில்லை
உணர்வு உயிர் பெற்றிருப்பதால்
உணர முடிகிறது இருளை ..!

அப்பாவின் தொடு வுணர்வின்
அதிர்வால் அரவணைப்பு
அழகான இருள் சூழலில் ..!

உரத்த குரல் கேட்கிறது
அதன் மொழி அறியேன்
யார் குரல் அறியேன்
பெண் குரலோ
ஆண் குரலோ அறியேன்..!

அம்மா உன் குரலாகத் தானிருக்கும்
பாசப் புரிதல்
இதோ
இங்கிருந்து தொடக்கம் கண்டது!!

வலிக்க மிதித்ததால்
வலி தாங்காது குர லெடுத்தாய்..
கடல் அலையும் அமைதிபூண்டது
உன் குரல் கேட்டு..!!

மன்னித்து விடம்மா
பாசத்தின்
முதல் மன்னிப்பின் தொடக்கம்...!

இப்பொழுதும்
விழி விழித்திருக்க வில்லை
இருந்தும்
இருள் சற்று விலகிய
ஓர் வெளிச்சம் ..!

உள்ளுணர்வு பிதற்றுகிறது ..
எப்படி இருக்கும்
என் விழி காணும்
முதல் வெளிச்சம்..!

அம்மா !!

உன் விழி கொண்டு
காண்பேன் உனையே .!

உன் மூச்சை கடன் பெறுவேன்
உன் உயிராக நான் வாழவே..!

உனக்காக உண்பேன்
உன்னை காக்கவே..!

உன் விரல் பிடித்து
அழைத்துச் செல்வேன்
உன் விரல் கொண்டே..!

உன் புலம் கொண்டு
இருப்பேன்
உனக்கு பலமாய் .!
அன்னையே ..!

எனை ஈன்றவளே..!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: