செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மௌன மொழி வேறு அல்ல ?!!


சுற்றிச் சுழலும் மாந்தர்களின் கண்கள்
சுருங்கியே குவிந்தன நடந்து வரும்..!?

நான்கு சிறார் அவர்கள் புறம்
நானும் விழியைக் குவித்தேன் சிறார்மீதே ?...

மௌன மொழி தெரித்தது வாசகமாக
மெல்லிய விரல்கள் தாளம் இசைத்தன..!!

கண்களும் இமைகளும் நடன மாட
கலவரமின்றி கருத்தரங்கு அரங் கேறியது...

வேடமிட்ட கண்களால்; மலர்ச்சி பெறும்
வேற்றுமை யிலா மலரின் தேனுக்கு...

வஞ்சகம் புரிந்திடாதீரும்; நா இழந்த
வல்லவரிடம் சிறுமை முகம் படராதீரும்...!

மண்ணில் வேண்டு வென கிட்டிய
மாந்தர்களே மாசு மன மாந்தர்களே!!

--------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: